
உடைந்த சுவர் ஒன்றில்
குறுக்கும் நெடுக்குமாகப் புறப்பட்ட
வெடிப்புக்கீறல்களில் தோன்றி மறையும் என் குழந்தையின் முகம்
கீச்சிடும் பறவைக்குஞ்சுகளின் மொழி நெஞ்சையள்ளும்
தூரத்தே எழும் பள்ளிக்குழந்தைகளின் ஒருமித்த குரல்கள்
வாழ்வை அர்த்தமிழக்க வைக்கும்
தூரப்பயணத்தின் முடிவில் வெறும் கையோடு
வீடடையும்போது கையிலிருக்கும் பணம்
யாருமற்ற தனிமையைச் சொல்லியழும்
என் எல்லாம் அழிந்த பின்னும் தோற்றுக்கொண்டிருக்கிறேன்
ஒரு கூரைத்தகட்டின் கீழே
என் உலகம் இருக்குமென்னும் நம்பிக்கையிடம்.
0 comments:
Post a Comment